தூத்துக்குடி

கோவில்பட்டி பள்ளியில் குழந்தைகள் கொலு

DIN

நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் கொலு, விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 
இந்நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் மாணிக்கவாசகம், பொருளாளர் ரத்தினராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர், மாணவிகள் பல்வேறு சுவாமிகள் வேடமணிந்து, குழந்தைகளின் கொலு நடைபெற்றது. தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் பலவகையான உணவு பதார்த்தங்களை தயாரித்து விற்பனை செய்தனர். 
தொடர்ந்து, பல்வேறு விளையாட்டுகளும் நடைபெற்றன. இதில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தாழையப்பன், முருகன், தங்கமணி, பால்ராஜ், மனோகரன், செல்வம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தேன்மொழி தலைமையில், விழா கமிட்டியினர் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT