தூத்துக்குடி

சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு அக்.15இல் ஹாக்கிப் போட்டி

DIN

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான ஆண்கள் ஹாக்கிப் போட்டி கோவில்பட்டி கே.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறுகிறது.  
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கண்ணப்பன் விடுத்துள்ள அறிக்கை:
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகள் பங்கேற்கும் ஆண்கள் ஹாக்கிப் போட்டி கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அக். 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 
இப்போட்டியை கே.ஆர்.  கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தொடங்கி வைக்கிறார். 
இதில், பல்கலைக்கழகத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட  கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் வெற்றிபெறும் அணியினருக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை இயக்குநர் துரை ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கவுள்ளனர். ஏற்பாடுகளை எனது தலைமையில், உடற்கல்வி இயக்குநர் ராம்குமார் செய்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT