தூத்துக்குடி

மது விற்பனை: தொழிலாளி கைது

DIN

கோவில்பட்டியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட தொழிலாளியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீஸார் பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பால்பாண்டியன் பேட்டையில் மது விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட இலுப்பையூரணி கடலையூர் சாலை பழந்தோட்ட நகரைச் சேர்ந்த சேசுதாஸ் மகன் ஆரோக்கியராஜை (47) கைது செய்து,  அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT