தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் அருகே சாலை விபத்தில் தூத்துக்குடி இளைஞர் பலி

DIN

குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தூத்துக்குடி இளைஞர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சரவணகுமார் (18). இவர், தூத்துக்குடியில் உள்ள உணவகத்தில் வேலைபார்த்து வந்தார்.  இவரும் இவரது நண்பர் விக்கியும் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து  வந்துகொண்டிருந்தனர்.  கல்லாமொழி அருகே வந்தபோது வாகனத்தை முந்த முயன்றபோது சாலையோர மணலில் சிக்கி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சரவணகுமார் செவ்வாய்க்கிழமை   உயிரிழந்தார்.  இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT