காயல்பட்டினத்தில் மண்பாண்ட கண்காட்சி
காயல்பட்டினம் கடற்கரையில் பழமையில், புதுமை எக்ஸ்போ 2018 என்ற தலைப்பில் மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை கண்காட்சி நடைபெற்றது.
காயல்பட்டினம் கடற்கரையில் பழமையில், புதுமை எக்ஸ்போ 2018 என்ற தலைப்பில் மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை கண்காட்சி நடைபெற்றது.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முஹம்மத் ரிஃபாஸ், முஹம்மத் முஹ்யித்தீன், ஷேக் பைஸல் ஆகியோர் இணைந்து நடத்திய இக்கண்காட்சியை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ் தொடங்கிவைத்தார்.
கண்காட்சியில் மண்பாண்டங்களால் செய்யப்பட்ட தண்ணீர் பானைகள், சமையல் பாத்திரங்கள், தண்ணீர் குடுவைகள், தேனீர் குடுவைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. மேலும் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படும் பிரிவும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.