தூத்துக்குடி

விபத்தில் இளைஞர் சாவு

DIN

திருச்செந்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர்  உயிரிழந்தார்.
திருச்செந்தூர் அருகேயுள்ள இராணிமகராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்  மகன் சிவராஜகுமார் (35). இவர் திருச்செந்தூர் பந்தல் மண்டபத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 4-ஆம் தேதி இரவு வேலை முடிந்து பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். கோயில்விளை பகுதியில் வரும் போது எதிரே வந்த வாகனம் சிவராஜகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்து,   உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அதிகாலை ரோந்து வந்த ஊர்க்காவல் படையினர்  ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  முதலுதவி சிகிச்சைக்குப்பின், திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர்  ஞாயிற்றுக்கிழமை இரவு  உயிரிழந்தார். விபத்துகுறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் தி.ரெகுராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT