தூத்துக்குடி

எட்டயபுரத்தில் ஸ்கேட்டிங் மூலம் தலைக்கவசம் விழிப்புணர்வுப் பிரசாரம்

DIN

பாரதி கல்வி மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் பாரதி நினைவு தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பிரசார ஊர்வலம் எட்டயபுரத்தில் நடைபெற்றது.
பாரதி அன்பர் எஸ்.பி.எம். ராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றச் செயலர் மு. பரமானந்தம்,  பாரதி கல்வி மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பிரசார ஊர்வலமானது பாரதி பிறந்த இல்லம் முன்பிருந்து தொடங்கி, எட்டயபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பாரதி நினைவு மணிமண்டபத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது தலைக்கவசம் அணிதல், மரக்கன்றுகள் நடுதல், வாக்காளர் விழிப்புணர்வு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஸ்கேட்டிங்  செய்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். 
நிகழ்ச்சியில் பாரதி இல்லக் காப்பாளர் செ. மகாதேவி, பாரதி மணிமண்டப வழிகாட்டி பினோ, டிரஸ்ட் நிர்வாகிகள் கதிரேசன், ஹேமலதா, பயிற்சியாளர்கள் சித்ரா, பாண்டி மீனா, துர்கா, அசோக்குமார், மதீஷ்குமார் மாணவ, மாணவியர் விஷ்னு, சூர்ய பிரகாஷ், கீதாஸ்ரீ,  சைலேஷ், நிக்லேஷ், பூர்வீகா, ஜெயசக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT