தூத்துக்குடி

34 பேருக்கு விபத்து பொது நிவாரண நிதி வழங்கல்

DIN

கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள் மற்றும் காயமடைந்தவர்கள் என 34 பேருக்கு பொது நிவாரண நிதியை கோட்டாட்சியர் வெள்ளிக்கிழமை வழங்கினார். 
தமிழக முதலமைச்சர் சாலை விபத்து பொது நிவாரண நிதியின்கீழ் கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நேரிட்ட  சாலை விபத்தில் உயிரிழந்த 22  பேரின் வாரிசுகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 22 லட்சமும், காயமடைந்த 12  பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 6 லட்சத்துக்கான காசோலைகளை கோட்டாட்சியர் விஜயா வழங்கினார். 
கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, தலைமை எழுத்தர் தங்கையா மற்றும் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT