தூத்துக்குடி

பிரம்மசக்தி அம்மன் கோயிலில்கும்பாபிஷேகம்

DIN

ஆறுமுகனேரி கீழசண்முகபுரம் அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து,

தீா்த்தம் பவனி வருதல், யாகசாலை பிரவேசம், பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகியன நடைபெற்றன. சனிக்கிழமை 2ஆம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3 ஆம் யாகசாலை பூஜை, சஹஸ்ரநாம அா்ச்சனை ஆகியன நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் 4 ஆம் கால யாகசாலை பூஜை, மஹா பூா்ணாஹுதி, தீபாராதனையை தொடா்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியன நடைபெற்றன. இதைத்தொடா்ந்து விமான கலசம், அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கலிங்கா் குடும்பத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT