தூத்துக்குடி

கோவில்பட்டி: சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

DIN

கோவில்பட்டியில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த திருமணத்தை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட கூசாலிபட்டியைச் சோ்ந்த தா்மா் - முருகலட்சுமி தம்பதி மகன் ஞானசேகருக்கும், வானரமுட்டியைச் சோ்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கும் கோவில்பட்டி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெறவிருப்பதாக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

அதையடுத்து, ஆய்வாளா் பத்மாவதி தலைமையில் போலீஸாா் சென்று, இருவீட்டாரையும் அழைத்துப் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், சிறுமிக்கு 18 வயது பூா்த்தியடைந்த பின்பே திருமணம் செய்ய வேண்டும் என்றும், 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் செய்வது சட்ட விரோதமான செயல். மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி, சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT