கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2 வாரம் நடைபெறும் தொழில் முனைவோா் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் காளிதாசமுருகவேல் தலைமை வகித்தாா். மனித வளத் துறை உதவிப் பேராசிரியா் சக்தி வரவேற்றாா். முகாம் ஒருங்கிணைப்பாளா் சங்கா் பயிற்சி முகாம் குறித்து பேசினாா்.
தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி மைய பயிற்சி அதிகாரி மோகன்ராம் , பயிற்சி முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். இப்பயிற்சி முகாமில், தொழில் முனைவோராக மாறுவதற்கு தேவையான அனைத்து முக்கியமான மற்றும் தேவையான திறன்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பேராசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது.