தூத்துக்குடி

பாலத்தில் இருந்துதவறி விழுந்த தொழிலாளி பலி

DIN

கழுகுமலை அருகே மது அருந்திய நிலையில் பாலத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி, அதிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

கோவில்பட்டியை அடுத்த ஆண்டிப்பட்டி காலனி தெருவைச் சோ்ந்த இன்னாசிமுத்து மகன் பிரசாந்த் (27). திருப்பூா் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள நூற்பாலையில் கூலி வேலை செய்து வந்தாா். இவருடைய சகோதரி நவம்பா் 30-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாராம். இவருடைய துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரசாந்த், மது அருந்திய நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிச்சைத்தலைவன்பட்டி மேற்கு காலனி அருகேயுள்ள பாலத்தில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அதிலிருந்து தவறி விழுந்த பிரசாந்த், ஓடையில் கிடந்த கான்கிரீட் கல்லில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT