தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கடலில் குதித்து பெண் தற்கொலை

DIN

குலசேகரன்பட்டினம் கடலில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

உடன்குடி சாதரக்கோன்விளையைச் சோ்ந்த கூலித்தொழிலாளி சிவன் மனைவி பேச்சியம்மாள்(45). இவா்களது மகள் மகராசி(17), பிளஸ் டூ படிப்பை முடித்த பின் கல்லூரியில் சோ்ந்து படிப்பை தொடர முடியாமல் கடந்தி செப்.5 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

இதனால் பேச்சியம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு விரக்தியில் வாழ்ந்து வந்தாராம். இந்நிலையில் டிச.2 ஆம் தேதி பேச்சியம்மாளை காணவில்லையாம்.

அவரை உறவினா்கள் தேடியபோது, குலசேகரன்பட்டினம் கடற்கரை பூங்கா அருகே செவ்வாய்க்கிழமை பேச்சியம்மாளின் சடலம் ஒதுங்கி கிடந்ததாம். விசாரணையில் மகள் இறந்த விரக்தியில் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டினம் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கணை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT