தூத்துக்குடி

ஜெயலலிதா பிறந்தநாள்: நல உதவிகள் வழங்கி கொண்டாட அதிமுக கூட்டத்தில் முடிவு

DIN


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட அவைத் தலைவர் அமலிராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.  
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலர் என். சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
 ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கியும்,  ஆதரவற்ற இல்லங்களில் அன்னதானம் வழங்கியும் கொண்டாட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
கூட்டத்தில்,  மாவட்டப் பொருளாளர் ஜெபமாலை,  எம்ஜிஆர் மன்றச் செயலர் செல்லத்துரை, வழக்குரைஞர் பிரிவு செயலர் யு.எஸ். சேகர்,  இளைஞரணிச் செயலர் தளபதி பிச்சையா, மேற்கு பகுதி செயலர் ஏ. முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT