தூத்துக்குடி

லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு

DIN

கோவில்பட்டி அருகே லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
கோவில்பட்டி சாத்தூர் சாலை ஏ.என்.ஏ. நகரைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் முத்துமாரியப்பன் (37). லாரி ஓட்டுநரான இவர், வெள்ளிக்கிழமை அதிகாலையில் மூன்றடைப்புக்குச் சென்று வாழைக்காய் எடுப்பதற்காக லாரியை ஓட்டிச் சென்றாராம். 
அப்போது, திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியையடுத்த இடைசெவல் அருகே சாலையோரத்தில் லாரியை நிறுத்தியிருந்தபோது,  மர்ம நபர்கள் இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரைத் தாக்கிவிட்டு, லாரியில் வைத்திருந்த ரூ.46ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டனராம்.  இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT