முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளம் கோயிலில் திருட்டு

விளாத்திகுளம்  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை  திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 23 ஜனவரி 2019, 5:55 am IST
பகிர்:

விளாத்திகுளம்  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை  திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இக்கோயிலில் கடந்த 17ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோயில் பிரகாரத்தில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.  கோயில் இரவு காவலாளி ஆவுடையப்பன் அதிகாலையில் கண்விழித்து பார்த்த போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கோயில் காவலாளி ஆவுடையப்பன் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து, கோயில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.