தூத்துக்குடி

மூக்குப்பீறி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

DIN

நாசரேத் அருகே உள்ள  மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகள் காத்திருப்பு அறை  மற்றும் மருத்துவர் ஆலோசனை அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார்.  மூக்குப்பீறி சேகரகுரு ஜெரேமியா ஆரம்ப ஜெபம் செய்தார்.   தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன் வரவேற்றார். மருத்துவ அலுவலர் முத்துக்கண்ணம்மாள், தூய மாற்கு மேல்நிலைப் பள்ளித் தாளாளர் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தலைமை ஆசிரியர் குணசீலராஜ், தொழிலதிபர் அருள்ராஜ், மருந்தாளுநர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT