தூத்துக்குடி

நகைகள் திருட்டு: 3 பேர் கைது

DIN


புளியம்பட்டி அருகே வீட்டின் கதவுகளை உடைத்து நகைகளை திருடிய 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
புளியம்பட்டி அடுத்துள்ள மருதன்வாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவர் வி.வேலம்மாள் (48). இவர், வியாழக்கிழமை வெளியூருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தபோது, வீடு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, கம்மல் உள்ளிட்ட 4 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் திருடு போயிருந்தது தெரிய வந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் புளியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, நகை திருட்டில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த செந்தூர்முருகன் (45), செல்லதுரை (43), பழனிசாமி (42) ஆகியோரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT