தூத்துக்குடி

ஜூன் 28இல் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

DIN

மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் மற்றும் சுயதொழில் நடத்திட  தொழில் முனைவோர் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 28)  நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் மற்றும் சுயதொழில் நடத்திட தொழில் முனைவோர் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.  
பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்து அலுவலர்கள் எடுத்துரைக்கவுள்ளனர்.  
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன்,  தூத்துக்குடி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0461- 2321678 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT