தூத்துக்குடி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கருங்கடலில் மனிதச் சங்கிலி

DIN

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எய்த வேண்டும் என வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு மனிதச்சங்கலி கருங்கடல் ஊராட்சியில்  வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு, ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஆணையர் தங்கவேல் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பாலஹரிகர மோகன் முன்னிலை வகித்தார். 
இதில் வாக்களிப்பது நமது கடமை; ஜனநாயக முறைப்படி நேர்மையுடன் 100 சதவீத வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. 
தொடர்ந்து, கருங்கடல் ஊராட்சி அலுவலகம் முன் மனிதச் சங்கலி நடைபெற்றது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் சோமசுந்தரம், சிவகலா, ஜெயக்குமார், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முருகேசன் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT