கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி மணப்பாட்டில் திமிங்கல குருசின் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது.
இதையொட்டி புனித யாகப்பர் ஆலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் திரளானோர் கலந்துகொண்டனர். இந்த, ஊர்வலம் நடுத்தெரு, ராஜத்தெரு, ஆயர் தெரு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று யாகப்பர் ஆலயத்தில் நிறைவடைந்தது. அங்கு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் ஆயர்கள் மரியஜான், சேவியர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை யாகப்பர் ஆலய மக்கள் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.