தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

DIN

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல் வட்டங்களில் உள்ள தனியார் திருமண மண்டபங்கள், தனியார் அச்சக உரிமையாளர்களுக்கான தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, வட்டாட்சியர் சந்திரன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர்கள் சுந்தரராகவன், சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா ,  தேர்தலின் போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து பேசினார். வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் வாலசுப்பிரமணியன் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  துணை வட்டாட்சியர் பேச்சிமுத்து வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் அய்யனார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT