தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில்  நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

DIN

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எம்.சி. சண்முகையாவை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
  தூத்துக்குடி ஸ்பிக்நகர், மாப்பிள்ளையூரணி, செக்காரக்குடி ஆகிய பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட  அவர் பேசுகையில்,  கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வாக்களித்தீர்கள்.  தற்போது மே 19 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வாக்களியுங்கள்.
 தமிழகத்தில்  மக்களுக்கான எந்த நல்ல திட்டங்களும் நடைபெறவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் 38 ஆயிரம் போராட்டம் நடைபெற்றதாக முதல்வர் கூறுவது ஒரு சாதனையா?.  மக்களவை தேர்தல்,  சட்டப் பேரவை இடைத் தேர்தலில்  திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார் அவர்.
   நிகழ்ச்சியில், திமுக வேட்பாளர் எம்.சி. சண்முகையா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஆஸ்டின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக இளைஞரணி மாநில துணைச் செயலர் எஸ். ஜோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT