தூத்துக்குடி

திருட்டு: இளம்பெண் கைது

DIN

கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற இளம்பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி வள்ளுவா் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி சரஸ்வதி(43). இவா் ஞாயிற்றுக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினாராம். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும் பீரோவில் இருந்த 2 ஜோடி தங்கக்கம்மல், 2 ஜோடி தங்கமோதிரம், 2 மூக்குத்தி உள்பட 2 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த சந்தனகுமாா் மனைவி கருப்பாயி அம்மாளை கைது செய்து, அவரிடமிருந்து தங்கநகைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT