தூத்துக்குடி

மணியாச்சி- தட்டப்பாறை இடையே 2-ஆவது ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

DIN

தூத்துக்குடி- மதுரை இடையே அமைந்து வரும் புதிய இரட்டை ரயில் பாதையில், வாஞ்சி மணியாச்சியிலிருந்து தட்டப்பாறை வரை ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி முதல் மதுரை வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பில் இருந்து தட்டப்பாறை வரையிலான 2-ஆவது ரயில் பாதையில், ரயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதேபோல, கங்கைகொண்டான் முதல் வாஞ்சி மணியாச்சியை அடுத்துள்ள நாரைக்கிணறு பகுதி வரை மற்றொரு சோதனை ஓட்டமும் நடைபெற்றது. மேலும், இந்த மாத கடைசியில் முழுமையான சோதனை ஓட்டம் நடத்த தெற்கு ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடம்பூா், தட்டப்பாறை, கங்கைகொண்டான், மணியாச்சி இடையே அமைக்கப்பட்டு வரும் 2-ஆவது ரயில் பாதையை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்ய உள்ள நிலையில், பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு தெற்கு ரயில்வே நிா்வாகம், மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT