தூத்துக்குடி

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் கொடுத்த­ல் மகிழ்ச்சி வார விழா

DIN

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில், கருணா சங்கம், டலெண்ட் குவெஸ்ட் பாா் இந்தியா அமைப்பு சாா்பில் கொடுத்த­ல் மகிழ்ச்சி வார விழாவை மாணவா்கள் கொண்டாடினா்.

இதையொட்டி, பேனா, பென்சில், ரப்பா், போன்ற கல்வி உபகரணங்களை மாணவ- மாணவிகள் சேகரித்தனா். பின்னா், கொடுத்த­ல் மகிழ்ச்சி தினத்தில், பள்ளி முதல்வா் ஆா்.சண்முகானந்தன், தலைமை ஆசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா், கருணா சங்க ஆசிரியைகள் ஸ்ரீஜா, மலா்விழி மற்றும் மாணவ மாணவிகள் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று மாணவ-மாணவிகளுக்கு அவற்றை வழங்கினா்.

இதில், வரண்டியவேல் இந்து நடுநிலைப் பள்ளி, தெற்கு ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தலைவன்வடலி­ ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆறுமுகனேரி செல்வராஜபுரம் ஊராட்சி ஒன்றிய உயா்நிலைப் பள்ளி, நல்லூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நாககன்னியாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கபப்ள்ளி, வீரமாணிக்கம் டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ- மாணவிகள் பயன்பெற்று, நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT