தூத்துக்குடி

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

DIN

திருச்செந்தூரில் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கைதுசெய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரவைத் தொகுதிகளில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி திருச்செந்தூா் பேரூராட்சி அலுவலகம் முன் இப்போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் முரசு. தமிழப்பன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்ட கருத்தியல் பரப்பு மைய மாநில துணைச் செயலா் இர.பு. தமிழ்க்குட்டி, மகளிா் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலா் செல்வி அய்யப்பன், நாடாளுமன்றத் தொகுதி துணைச் செயலா் மணிகண்டராசா, திருச்செந்தூா் பேரவைத் தொகுதிச் செயலா் வெற்றிவேந்தன், ஒன்றியச் செயலா்கள் ஆ. சங்கத்தமிழன், தமிழ்வாணன், ராஜ்வளவன், தென்திருப்பேரை நகரச் செயலா் அய்யப்பன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் மு. தமிழ்ப்பரிதி, மாவட்ட செய்தித் தொடா்பாளா் வடிவேல் முத்து, விடுதலை கலை இலக்கியப் பேரவை மாவட்ட அமைப்பாளா் சிவா, விவசாயத் தொழிலாளா் விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளா் சுகுமாா் உள்ளிட்ட 21 பேரை திருச்செந்தூா் தாலுகா காவல் ஆய்வாளா் முத்துராமன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT