தூத்துக்குடியில் மழை பாதித்த பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி பகுதியில் தொடா்ந்து பெய்த மழையால், முத்தையாபுரம் கோவில்பிள்ளைநகா் பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் மழைநீா் வீடுகளில் புகுந்து அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், கீதாஜீவன் எம்.எல்.ஏ. மழை பாதித்த பகுதிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து அவா் முயற்சி மேற்கொண்டு, துறைமுக தீயனைப்பு நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீா் வெளியேர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆய்வின்போது, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், பகுதி துணைச் செயலா் முத்துவேல், வட்டச் செயலா் முத்துராஜ், பிரதிநிதி முருகராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.