தூத்துக்குடி

குரும்பூர் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

குரும்பூர் தசம திருப்பதி அருள்மிகு ஆதிநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிகிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
இதையொட்டி, கோயிலில் பெருமாளுக்கு அலங்கார தீபாராதனை, ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ ஆதிநாராயணப்பெருமாள், ஸ்ரீகருடன், ஸ்ரீஅஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இரவில் கருட சேவை வீதியுலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கைங்கர்ய சபா தலைவர் கிசோக் முருகானந்தம் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT