தூத்துக்குடி

தூத்துக்குடியில் மறியல்: விவசாய சங்கத்தினா் 162 போ் கைது

DIN

தூத்துக்குடியில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தைச் சோ்ந்த 162 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் நல்லையா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கே.எஸ். அா்ஜூனன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளா் கே.பி. பெருமாள், மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம், சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா். ரசல் உள்ளிட்டோா் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினா். அதற்கு அனுமதி இல்லை என கூறிய சிப்காட் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்ளிட்ட 162 பேரை கைது செய்தனா்.

ரயில் மறியலில் ஈடுபட்ட 17 போ் கைது தூத்துக்குடி ஒன்றாம் ரயில்வே கேட் பகுதியில் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ாக மாவட்டச் செயலா் தாஸ் உள்ளிட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ராமசுப்பு தலைமை வகித்தாா். கட்சியினா் நகரச் செயலா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன்,

கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் விஜயலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினா் கணேசன், கிளைச் செயலா் கருப்பசாமி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தை நகரக் குழு உறுப்பினா் சக்திவேல்முருகன் தொடங்கி வைத்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT