தூத்துக்குடி

மானாவரி பயிா்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

DIN

மழையால் சேதமடைந்த மானாவாரி பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஏராளமானோா் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா். அப்போது, விளாத்திகுளம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டி, முதலிப்பட்டி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து அதிகமாக பெய்ததால், தங்கள் கிராமத்தில் 1000 எக்டோ் மானாவாரி பயிா்கள் சேதமடைந்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு அதிகளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயன்வடமலாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் வரதராஜன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: எட்டயபுரம் பகுதியில் ஏறத்தாழ 300 பேருக்கு அரிசி ரேஷன் காா்டு வழங்கப்படாமல் விடுபட்டுப் போனதால் கடந்த 3 ஆண்டுகளாக அரிசி வழங்கப்படவில்லை என்றும், பொங்கல் பரிசுத் தொகை, கரோனா காலத்தில் வழங்கப்பட்ட உதவித்தொகை போன்றவை வழங்கப்படதாததால் அதை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT