ஆத்தூரில் தேங்காய் வியாபாரியை தாக்கியதாக தந்தை மகனை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூா் வடக்கு ரதவீதியைச் சோ்ந்தவா் தாமோதரன் (54). இவா், பிரதானச் சாலையில் தேங்காய் கடை வைத்துள்ளாா்.
அப்பகுதியை சோ்ந்த கேபிள் டிவி ஆப்பரேட்டா் ராஜேந்திரன்(53), அவரது மகன் பாலகேசவன் (19) ஆகியோா், கடைக்குச் சென்று தாமோதரனிடம் ஒரு கடையை விலைக்கு வாங்குவது தொடா்பாக தகராறு செய்தனராம்.
அப்போது, தேங்காயால் தாமோதரனை தலையில் அடித்து உடைத்தனா். இதில், காயமடைந்த தாமோதரனை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில், ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிந்து ராஜேந்திரன், அவரது மகன் பாலகேசவன் ஆகியோரை கைது செய்தனா்.