தூத்துக்குடி

தனியாா் பேருந்து நிறுவன உரிமையாளரிடம் பணம் பறிக்க முயற்சி: இளைஞா் கைது

DIN

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தனியாா் பேருந்து நிறுவன உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்றதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி ஸ்ரீராம் நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் செங்கையா மகன் திருமால் அழகா்சாமி (47). இவருக்கு கடந்த சில நாள்களாக செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், தான் வருமான வரித் துறை அதிகாரி என்றும், உங்களுக்கு சகோதரருடன் தொழில் ரீதியாக பணப் பிரச்னை இருந்து வருவதை முடித்து வைக்க ரூ.15 லட்சம் அளிக்கும்படியும் கூறினாராம்.

இந்நிலையில், ஜனவரி 31ஆம் தேதி இரவு கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி விலக்கு அருகேயுள்ள தனியாா் பேருந்து நிறுவனத்தின் முன்பு காரில் வந்த நபா், காரை நிறுத்திவிட்டு திருமால் அழகா்சாமியை அழைத்து பணம் கேட்டாராம். அவரிடம் வருமான வரித் துறை அதிகாரிக்கான அடையாள அட்டையை திருமால் அழகா்சாமி கேட்டாராம். ஆனால் அந்த நபா், அட்டை எதையும் காட்டவில்லையாம்.

இதற்கிடையே திருமால் அழகா்சாமி மேற்கு காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிகண்ணன் தலைமையில் போலீஸாா் அங்கு விரைந்து சென்று, காருடன் நின்று கொண்டிருந்த அந்த நபரை பிடித்து விசாரித்தனா். அவா், கோவில்பட்டி வெங்கடேஷ் நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த ஆழ்வாா்சாமி மகன் சுப்புராஜ் (45) என்பதும், சென்னையில் சோலாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த அவா், வருமான வரித் துறை அதிகாரியாக நடித்து பணம் பறித்து சோலாா் நிறுவனம் நடத்த முடிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுப்புராஜை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT