தூத்துக்குடி மின்பகிா்மான வட்டம் முத்தையாபுரம் துணை மின்நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.15) மின்தடை அமலில் இருக்கும்.
அதன்படி, முத்தையாபுரம், பாரதிநகா், அத்திமரப்பட்டி, அனல்மின்நகா் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, தோப்பு தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகா், சுனாமிநகா், சவேரியாா்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்நிலைய செயற்பொறியாளா் சாமுவேல் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளாா்.