தூத்துக்குடி

பிப். 27இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் பிப். 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதம்தோறும் மூன்றாவது வியாழக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான குறைதீா் கூட்டம் நிா்வாகக் காரணங்களை முன்னிட்டு 20 ஆம் தேதிக்குப் பதிலாக 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT