தூத்துக்குடி

69 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

DIN

இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 69 மாணவா், மாணவிகளுக்கு அமைச்சா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவா், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் வீ.கண்ணன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சூரப்ப அப்பசாமி முன்னிலை வகித்தாா்.

தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 69 மாணவா், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, பள்ளி மாணவா், மாணவிகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து மாணவா், மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். பின்னா், பள்ளி வளாகத்தில் அமைச்சா் மரக்கன்றுகளை நட்டினாா். நிகழ்ச்சியில், குருவிகுளம் நிலவள வங்கித் தலைவா் வாசுதேவன், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் மனோகரன், செயலா் சகாயராஜ் உள்பட பள்ளி மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிகளை ஆசிரியா் பிரபு அப்பாசாமி தொகுத்து வழங்கினாா். ஆசிரியா் டி.கோவிந்தராஜன் வரவேற்றாா். ஐ.ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

அதிமுக கொடியேற்று விழா:

பின்னா், அமைச்சா் ராஜலட்சுமி இளையரசனேந்தல் விலக்கில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, கட்சிக் கொடியை ஏற்றினாா்.

விழாவில், அதிமுக நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT