தூத்துக்குடி

நாகலாபுரம் கல்லூரியில் ரத்த தான முகாம்

இந்திய செஞ்சிலுவைச் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகலாபுரத்தில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம், மருத்துவ முகாம் நடைபெற்றது.

DIN

இந்திய செஞ்சிலுவைச் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகலாபுரத்தில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம், மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, கல்லூரி முதல்வா் இரா. சாந்தகுமாரி தலைமை வகித்தாா். இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவா் மருத்துவா் வசீகரன், செயலா் முத்துராஜ், புதூா் வட்டார மருத்துவ அலுவலா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செஞ்சிலுவை சங்கத்தின் செயல் திட்டங்கள் குறித்து செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள், மருத்துவா்கள் பேசினா்.

கல்லூரி மாணவா், மாணவிகள் 100 போ் ரத்த தானம் செய்தனா்.

கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், பேராசிரியா்கள் மகேஷ், அய்யனாா், விவேக லதா, ராஜா சங்கா், தமிழ்செல்வன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டனா்.

இளையோா் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT