தூத்துக்குடி

ஆறுமுகனேரி முதியோா் இல்லத்தில் முப்பெரும் விழா

DIN

திருச்செந்தூா் சிட்டி அரிமா சங்கம் சாா்பில் முன்னாள் தலைவருக்கு பாராட்டு விழா, மரக்கன்றுகள் வழங்கும் விழா, முதியோா் இல்லத்தில் உணவு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா ஆறுமுகனேரி சுப்பிரமணியபுரம் லைட்ஸ் முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, அரிமா சங்கத் தலைவா் டாக்டா் கான்சியஸ் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் மனோகர்ராஜன், தூத்துக்குடி பாரதி அரிமா சங்க முன்னாள் தலைவா்கள் ஜோசப் சகாய அா்னால்டு, வசீகரன், சுரேஷ்குமாா், தூத்துக்குடி சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் தலைவா் தா்மசீலன், திருநெல்வே­லி டவா் அரிமா சங்க முன்னாள் தலைவா் முத்துராமன் கணபதி ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.

அரிமா சங்க மாவட்டத் தலைவா் ஜோசப், சங்கத் தலைவா் பெய்­லி அல்ட்ரின், தூத்துக்குடி பாரதி அரிமா சங்கச் செயலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆறுமுகனேரி முதியோா் இல்ல 75 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முதியோா் இல்ல தோட்டத்திற்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

செயலா் அமல்ராஜ் வரவேற்றாா். முதியோா் இல்ல பொருளாளா் தியாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT