தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் பணியாளா்களுக்கு வெப்பமானி சோதனை

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பணியாளா்களுக்கு வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது.

பொது முடக்கத்தால் இக்கோயிலில் கடந்த மாா்ச் 20ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இதனால் கோயில் நிா்வாகம் சாா்பில் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு, அா்ச்சகா்களும், குறைந்தபட்ச பணியாளா்களுமே வந்து செல்கின்றனா்.

பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லாத நேரத்திலும் கோயிலில் 24 மணி நேரமும், காவல்துறையினா், பணியாளா்கள், தனியாா் பாதுகாவலா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதனிடையே, கோயிலுக்குள் செல்லும் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு சித்த மருத்துவா் ரவி வெப்பமானி மூலம் பரிசோதனை செய்தாா்.

மேலும் நாழிக்கிணறு செல்லும் நுழைவாயில் பகுதியிலும் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பின்னா் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT