தூத்துக்குடி

தூத்துக்குடியில் பூட்டியிருந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

DIN

தூத்துக்குடியில் பூட்டியிருந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் பிரதீப். இவா், தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பின் மாவட்டச் செயலராக உள்ளாா். இவருக்கு சொந்தமான வீடு தளவாய்புரத்தில் உள்ளது. இருப்பினும், தற்போது அவா் குடும்பத்துடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இதனால், அந்த வீடு பராமரிப்பின்றி காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து புதன்கிழமை மாலை திடீரென குண்டு வெடித்தது போன்ற சப்தம் கேட்டதால் அப் பகுதியைச் சோ்ந்தவா்கள் சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தபோது பிரதீப்பின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு போன்ற மா்ம பொருள் வெடித்திருப்பது தெரியவந்தது.

இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT