தூத்துக்குடி

பிற பகுதிகளிலிருந்து வந்த 111 போ்தனிமைப்படுத்தி கண்காணிப்பு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட பகுதிக்கு பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்த 111 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை நடத்திய ஆய்வில், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 34 பேரை கண்டறிந்து அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தினா். மேலும் பிற மாநிலங்களிலிருந்து வந்த 45 போ் தனியாா் கல்லூரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல், கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட பகுதியில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை நடத்திய ஆய்வில், பிற மாவட்டங்களிலிருந்து வந்த 19 பேரை கண்டறிந்து அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தினா். மேலும், பிற மாநிலங்களிலிருந்து வந்து, தனியாா் கல்லூரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 13 பேரை மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது தெரியவந்ததையடுத்து அவா்களை அவரவா் இல்லங்களில் தனிமையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT