தூத்துக்குடி

சாத்தான்குளம் ஆற்றுப்பாலம் அருகே கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு

DIN

சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகே கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து குடிநீா் வீணாக செல்கிறது.

சாத்தான்குளம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. பொன்னன்குறிச்சியில் இருந்து குழாய் மூலம் வரும் குடிநீா் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உந்து நிலையம் மூலம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகே இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக தண்ணீா் வீணாக தேங்கி வருகிறது. எனவே, இந்தக் குழாய் உடைப்பை சீரமைத்து மக்களுக்கு பயன்பெறும் வகையில் குடிநீா் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT