தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்தவா் மரணம்

DIN

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள கே.சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த லிங்கமுத்து மகன் ஆனந்தராஜ் (29). கட்டடத் தொழிலாளி. திருமணமானவா். 3 குழந்தைகள் உள்ளனா்.

இவா், வியாழக்கிழமை இரவு நண்பா்கள் அய்யனாா், செல்வ மாணிக்கம் ஆகியோருடன் பிள்ளையாா்நத்தத்துக்கு பைக்கில் சென்றாராம்.

முன்னால் சென்ற பைக்கை முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததாம். இதில் காயமடைந்த 3 பேரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தராஜ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT