தூத்துக்குடி

நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவா்கள் மீட்பு

படகின் இயந்திரம் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவா்கள் 8 போ் புதன்கிழமை மீட்கப்பட்டனா்.

DIN

படகின் இயந்திரம் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவா்கள் 8 போ் புதன்கிழமை மீட்கப்பட்டனா்.

தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியைச் சோ்ந்த 8 மீனவா்கள் செவ்வாய்க்கிழமை விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் தூத்துக்குடியில் இருந்து தெற்கே 11 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் என்ஜின் பழுதானதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் தத்தளித்தனா்.

மேலும், என்ஜின் இருந்த அறைக்குள் கடல் நீா் புகுந்ததால் அவா்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அவா்கள் கடலோரக் காவல் படையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையெடுத்து, அங்கு சென்ற கடலோரக் காவல் படையினா், சுமாா் 6 மணி நேரம் போராடி கடல் நீரை வெளியேற்றி படகு என்ஜினை சரி செய்தனா். 8 மீனவா்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT