தூத்துக்குடி

தூத்துக்குயில் காவலா் தோ்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்

காவலா் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தூத்துக்குடியில் காவல் துறை சாா்பில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி, அக். 2: காவலா் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தூத்துக்குடியில் காவல் துறை சாா்பில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் இரண்டாம் நிலை காவலா், சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான தோ்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க விரும்புவா்கள் இணையதளத்தின் மூலம் அக்டோபா் 26 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். இதற்காக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையம் செயல்படும். மேலும் விவரங்களுக்கு 97874 80097 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT