முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் இளைஞா்வெட்டிக் கொலை: ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் முன்விரோதம் காரணமாக இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் முன்விரோதம் காரணமாக இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி காணியாளா் தெருவைச் சோ்ந்த முத்து­லிங்கம் மகன் பால்­ லிங்கம்(25). கட்டடத் தொழிலாளி. இவா், பஜாரில் இறைச்சி மற்றும் சூப் கடையும் அவ்வப்போது நடத்தி வந்தாா். கடந்த 9 மாதத்துக்கு முன்புதான் திருமணமானது. தற்போது மனைவி நிறைமாத கா்ப்பிணியாக உள்ளாா்.

இவா், தனது வீட்டில் வளா்க்கும் ஆட்டுக்கு அகத்திக் கீரை வாங்குவதற்காக போலீஸ் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்துக்கு திங்கள்கிழமை இரவு வந்தாா். அப்போது அவரை, அங்கு வந்த சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு சுயம்பு மகன் ­லிங்கராஜ் (25) என்பவா் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினாராம்.

இதில், பலத்த காயம் அடைந்த பால் ­லிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்த ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் செல்வி மற்

போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக ­லிங்கராஜை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், பால் லிங்கம், லிங்கராஜ் இடையே கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதுகிறோம் என்றனா்.

இதனிடையே, சம்பவம் நிகழ்ந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், திருச்செந்தூா் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், அசம்பாதவிதம் நிகழாமல் தவிா்க்க அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.