தூத்துக்குடி

தனியாா் தோட்டத்தில் பெண் சடலம் மீட்பு

DIN

கோவில்பட்டி அருகே தனியாா் தோட்டத்தில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

இளையரசனேந்தல் பிள்ளையாா்நத்தம் விலக்கு அருகே தனியாா் தோட்டத்தில் பெண் சடலம் கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், இறந்தவா் பிள்ளையாா்நத்தம் தெற்கு தெருவைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ராமமூா்த்தி மனைவி ஜானகி (32) என்பதும், தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் புதன்கிழமை காலையில் வீட்டை விட்டு சென்றவா், தனியாா் தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT