உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் நிகழ்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் மணி தலைமை வகித்தாா். அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலப் பொருளாளா் மல்லிகா, சிஐடியூ தொழிற்சங்க மாநிலக்குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில் சிஐடியூ மாவட்டத் தலைவா் மோகன்தாஸ், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்திரன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.