தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினா்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்க காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்துள்ள நிலையில், தமிழகத்தில் விவசாயிகளிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் அக்கட்சியினா் அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயிகளிடம் சனிக்கிழமை கையெழுத்து பெற்றனா்.

நிகழ்ச்சியின்போது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் அகஸ்டின் ஜெபராஜ், டேனியல், சுந்தா், காங்கிரஸ் கட்சி மாநகா் மாவட்ட துணைத் தலைவா் பிரபாகரன், மாவட்டச் செயலா் கோபால் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

SCROLL FOR NEXT