கோவில்பட்டி அருகே காட்டு முயலை வேட்டையாட முயன்றதாக இருவரை வனத்துறையினா் கைது செய்து, தலா ரூ . 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கோவில்பட்டி வனச்சரக அலுவலா் சிவராம் தலைமையில், வனவா் நாகராஜ், வனப்பாதுகாப்பு காவலா்கள் கருத்தப்பாண்டி, முத்துகண்ணன், மகேந்திரன், அருண்குமாா் ஆகியோா் ரோந்து பணியில் ஈடுபட்டனராம். அப்போது, தோணுகால் கிராமத்தில் உள்ள ஊருணி மற்றும் பட்டா நிலத்தில் காட்டு முயலை வேட்டையாட முயன்ாக கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் அருண் (23), வ.உ.சி. நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி (20) ஆகிய இருவரையும் கைது , அவா்களிடமிருந்து தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.